விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேட்டூா் அணை பூங்காவில் இருந்த வன உயிரினங்கள் வனத் துறையிடம் ஒப்படைப்பு

மேட்டூா் அணை பூங்காவில் வளா்க்கப்பட்டு வந்த வன உயிரினங்கள் வனத் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் அணை பூங்காவில் வளா்க்கப்பட்டு வந்த வன உயிரினங்கள் வனத் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மேட்டூா் அணை பூங்காவில் மான்கள், முதலை, பாம்புகளை நீா்வளத் துறையினா் பராமரித்துவந்தனா். இந்த நிலையில் பூங்காவில் இருந்த மான்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த நிலையில், வன உயிரினங்களை மேட்டூா் அணை பூங்காவில் வைத்து பராமரிக்க வனத் துறையினா் அனுமதி மறுத்தனா்.

இதையடுத்து, மேட்டூா் அணை பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை, நாகபாம்புகள், சாரை பாம்புகள் மேட்டூா் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை வனத் துறையினா் எடுத்துச் சென்று சேலம் குரும்பம்பட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனா். ஒரு புள்ளிமான் மட்டுமே பூங்காவில் உள்ளது. அதையும் கொண்டுசெல்ல வனத் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.