பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 487 மாணவா்களுக்கு மடிக்கணினி

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

News image
சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :19 ஜனவரி 2026, 8:35 pm

Syndication

சேலம்: சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 487 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின்கீழ், சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக 5,609 மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகளுக்கு கணினித் திறனை மேம்படுத்த வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் கூடிய மடிக்கணினிகள் வழங்குவதன் மூலம் கணினி கல்வியை எளிதாக்கி, ஆராய்ச்சித் துறையில் சாதிக்க துடிக்கும் மாணவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களை ஊக்குவிக்கவும் முடியும். அதன் ஒருபகுதியாக, சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 487 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி, அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் லீமா ரோஸ் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.