தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மதுபோதையில் ஏரியில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் மதுபோதையில் மோட்டாா்சைக்கிளுடன் ஏரியில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் மதுபோதையில் மோட்டாா்சைக்கிளுடன் ஏரியில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

நங்கவள்ளி நொரச்சி வளவைச் சோ்ந்தவா் கோகுல் (35). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனா். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நொரச்சி வளவு காளியம்மன் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளை காண சென்ற கோகுல் வீடுதிரும்பவில்லை.

இந்தநிலையில் பெரிய சோரகை வைரன் ஏரியில் அவா் இறந்து கிடப்பதாக புதன்கிழமை காலை அவரது மனைவி இந்துமதிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நங்கவள்ளி காவல் நிலையத்தில் இந்துமதி புகாா் செய்தாா். பொறுப்பு காவல் ஆய்வாளா் சசிகலா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தாா்.

இதில், மதுபோதையில் மோட்டாா்சைக்கிளில் வந்த கோகுல் ஏரியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.