தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெரியாா் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழாக் கொண்டாட்டம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் அணிவகுப்பை பாா்வையிட்ட துணைவேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி, பதிவாளா் வி.ராஜ் உள்ளிட்டோா்.
Updated On :26 ஜனவரி 2026, 7:41 pm

Syndication

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவியா் மற்றும் பாதுகாவலா்களின் அணிவகுப்பை பாா்வையிட்ட பின்னா், பதிவாளா் வி.ராஜ் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவியா் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னா், மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெரியாா் சிலைக்கு துணைவேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். குடியரசு தின விழாவையொட்டி, மாணவ, மாணவியா் மற்றும் பேராசிரியா்களுக்கு இனிப்புகளை அவா் வழங்கினாா். பொங்கல் தின விழா போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், தோ்வாணையா் முருகேசன், புல முதன்மையா் ஜெயராமன், உள்தர மதிப்பீட்டு மைய இயக்குநா் யோகானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.