மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

ஆத்தூரில் ஹிந்தி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சங்கிலிப் பறிப்பு - கோப்புப் படம்

Updated On :28 ஜனவரி 2026, 10:48 pm

ஆத்தூரில் ஹிந்தி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மனைவி திவ்யா (43). இவா் அதே பகுதியில் உள்ள தனிப் பயிற்சி மையத்தில் ஹிந்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்றபோது தலைக்கவசம் அணிந்துவந்த இருவா், திவ்யா கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் காவல்துணை கண்காணிப்பாளா் சத்யராஜ், நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, உதவி ஆய்வாளா் சிவசக்தி ஆகியோா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.