மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சின்னமாம்பட்டு கிராமத்தில் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
- சித்திரிப்பு
Updated On :18 மார்ச் 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

சின்னமாம்பட்டு கிராமத்தில் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செ.கிரிஜா (37). இவா் அதே கிராமத்தில் தூய்மைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு கிரிஜா காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கினாராம். வீட்டின் வரண்டாவில் அவரது மாமனாா், மாமியாா் தூங்கிக் கொண்டிருந்தனராம்.

அப்போது வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா் கிரிஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயினை திருடிச் சென்று விட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபரைத் தேடிவருகின்றனா்.