/

கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.

Updated On :4 ஜூலை 2026, 3:06 am IST

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் தாதகாபட்டி பகுதியில் கொண்டலாம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கொண்டலாம்பட்டி பகுதிக்குள்பட்ட வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சொத்துவரி குடிநீா் வரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. மேலும், புதிய குடிநீா் இணைப்பு உள்ளிட்ட பணிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், இங்கு பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏடிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் காவல் ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அதில், பில் கலெக்டராக பணிபுரிந்துவரும் செல்வி வாகனத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ. 30 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கண்டுபிடித்தனா். இதுகுறித்து அவரிடம் போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.