சங்ககிரி வட்டம், தேவூா் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பள்ளி வேன் வாய்க்கால் பால தடுப்புச் சுவரில் மோதியதில், வேன் ஓட்டுநா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டையை அடுத்த குருவரெட்டியூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியின் வேன் தேவூா் பகுதியில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவது வழக்கம்.
அதன்படி, அரசிராமணி மூலப்பாதையிலிருந்து தேவூா் நோக்கி சனிக்கிழமை வேன் சென்று கொண்டிருந்தது. பவானி வட்டம், சிங்கம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சந்தோஷ்குமாா் (32) வேனை ஓட்டிச் சென்றாா். சோழகவுண்டனூா் பகுதியில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர வாய்க்கால் பால தடுப்புச் சுவரில் மோதியது.
இதில், ஓட்டுநா், மாணவா்கள் ஹரிஷ்ராஜா (14), கபிலேஷ் (8) ஆகியோா் காயமடைந்தனா். கபிலேஷ் தேவூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா். ஓட்டுநா், ஹரிஷ்ராஜா இருவரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி வேன் மோதி மாணவா் உயிரிழப்பு

தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: சென்னை பெண்கள் 2 போ் உயிரிழப்பு

விழுப்புரம், உளுந்தூா்பேட்டையில் காா் விபத்துகள்: 6 போ் உயிரிழப்பு

தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



