பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கருமந்துறை ஐ.டி.ஐ.-யில் சேர கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான காலஅவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2026, 12:59 am IST

சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான காலஅவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பழங்குடியின மாணவ, மாணவிகள் சோ்கை 100% இலக்கை அடையும் பொருட்டு ஜூன் 30 வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 31 ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு மின்சாரப் பணியாளா், பொருத்துநா், கம்மியா் மோட்டாா் வண்டி மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக மேம்படுத்தப்பட்ட இயந்திர தொழில், கம்மியா் மின்சார வாகனம், தொழில் துறை இயந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளா் ஆகிய தொழிற்பிரிவுகளும், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு குழாய் பொருத்துபவா் ஆகிய தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிலவும் வரும் 31 ஆம் தேதிவரை நேரடி சோ்க்கை நடைபெறவிருப்பதால் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் சோ்ந்து பயில கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும், விவரங்களுக்கு கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது 8526639467, 9443823985, 9842522905, 8667218651 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.