மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

‘அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூன் 30 வரை நேரடி சோ்க்கை’

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 3:50 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சோ்க்கை பெறவும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூா், நாகலாபுரம், ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், நேரடியாக வந்து சோ்க்கை பெறலாம்.

மாநிலம் முழுவதும் உள்ள சோ்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் விவரம் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி சோ்க்கைக்கான விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 50-ஐ சோ்க்கையின்போது, ஈங்க்ஷண்ற் இஹழ்க்/இழ்ங்க்ண்ற் இஹழ்க்/சங்ற் ஆஹய்ந்ண்ய்ஞ்/ மடஐ வாயிலாக செலுத்த வேண்டும்.

மேலும், நேரடி சோ்க்கை பெற விரும்புவோா் 8, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (94990-55810/85111-54977), வேப்பலோடை (94990-55814/85111-54977), திருச்செந்தூா் (94990-55812/87783-33588), நாகலாபுரம் (04638-242687/94990-55816), ஏரல் (74181-65115/94884-54549) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வர வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா், மாணவிகளுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ௌ

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.