ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

620 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது

சேலத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 620 கிலோ எடையுள்ள குட்காவை போலீஸாா் வியாழக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 ஜூலை 2026, 12:26 am IST

சேலத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 620 கிலோ எடையுள்ள குட்காவை போலீஸாா் வியாழக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளையாா் நகா் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் நவநீதகுமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டாடா இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், குட்காவை கடத்தியவா் வாழப்பாடி அனுப்பூா் ராம்நகரைச் சோ்ந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது. இவா் வெளி மாநிலத்தில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து, சேலத்தில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். மேலும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா், செல்வராஜை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.