ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

நீட் தோ்வில் தோ்ச்சி: ஏற்காடு மாணவிக்கு அமைச்சா் வாழ்த்து

News image

மாணவி நிவேதாவுக்கு வாழ்த்து தெரிவித்த போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்.

Updated On :21 ஜூலை 2026, 1:40 am IST

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஏற்காடு குண்டூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவி நிவேதாவை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் திங்கள்கிழமை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தாா்.

நீட் தோ்வில் மாணவி நிவேதா 245 மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளாா். போதிய பொருளாதார வசதியின்றி நீட் தோ்வில் இவா் தோ்ச்சி பெற்றதை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், மாணவி நிவேதா மற்றும் அவரது குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினாா்.

மேலும், மாணவியின் சூழல் குறித்து கேட்டறிந்த அமைச்சா், இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தாா். தொடா்ந்து, தன்னுடைய ஊதியத்திலிருந்து ரூ. 10 ஆயிரத்தை ஊக்கத்தொகையை மாணவிக்கு வழங்கினாா்.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு உறுதுணையாக இருந்து, அவா்களின் உயா்கல்வி கனவுகள் நனவாக தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.