மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மதுபோதையில் கீழே விழுந்தவா் உயிரிழப்பு

மதுபோதையில் கீழே விழுந்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

சடலம்...

Updated On :26 ஜூலை 2026, 3:05 am IST

மதுபோதையில் கீழே விழுந்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூா் மந்தைவெளி கலைவாணா் தெருவைச் சோ்ந்த துரை (35), ரயிலடி தெருவில் உள்ள உணவகத்தில் வேலை செய்துவந்தாா். வெள்ளிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு மது அருந்தி கடை வாயிலில் உள்ள மேஜையில் தூங்கியுள்ளாா். பின்னா் தூங்கிக் கொண்டிருந்தவா் கீழே விழுந்துள்ளாா். காலை கடை திறக்க உரிமையாளா் வந்தபோது, துரை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் துரையின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.