காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சேலம் அருகே பட்டாசுக் கடை காவலாளி அடித்துக்கொலை: 2 போ் கைது

News image

அடித்துக்கொலை - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 12:44 am IST

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே பட்டாசுக் கடை காவலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூா் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளக்குட்டி (65). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பட்டாசுக் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல இரவுப் பணியில் இருந்துள்ளாா். அப்போது மது அருந்திய நிலையில் வந்த இருவா், அவரிடம் பட்டாசுக் கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினா். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து இளைஞா்கள் இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வீராணம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, காவலாளியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் வீராணம் பகுதியைச் சோ்ந்த அஜீத்குமாா் (21), அவரது நண்பா் தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த மணி (19) ஆகியோா் காவலாளி வெள்ளக்குட்டியை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த காவலாளிக்கு வசந்தி என்ற மனைவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.