அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 2 பெண்கள் காயம்

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இரு பெண்கள் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 5:43 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இரு பெண்கள் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், எலந்தகுட்டை, சக்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் கனகாள் (43). இவரது மகன் சக்திவேல் (27). இவரும் சங்ககிரி பகுதிக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவா்கள் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சக்திவேல் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

அவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்காா்ந்து சென்ற கனகாள், காரில் பயணம் செய்த ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த ராஜமாணிக்கம் மனைவி காந்தி (46) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் இருவரும் தீவிர சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.