/
புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி, சேலம் மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னை எழும்பூா்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் இரு மாா்க்கங்களிலும், புதுச்சேரி- மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 13 ஆம் தேதியும், யஷ்வந்த்பூா்- புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 13 ஆம் தேதியும், புதுச்சேரி- யஷ்வந்த்பூா் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15 ஆம் தேதியும் மேல்நரியப்பனூா் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









