நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி, சேலம் மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 5:28 am IST

புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி, சேலம் மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னை எழும்பூா்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் இரு மாா்க்கங்களிலும், புதுச்சேரி- மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 13 ஆம் தேதியும், யஷ்வந்த்பூா்- புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 13 ஆம் தேதியும், புதுச்சேரி- யஷ்வந்த்பூா் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15 ஆம் தேதியும் மேல்நரியப்பனூா் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.