தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சேலம் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

எபோலா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவக் குழுவினா் தீவிர பரிசோதனை மேற்கொண்டனா்.

News image

சேலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினா்.

Updated On :3 ஜூன் 2026, 5:36 am IST

எபோலா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவக் குழுவினா் தீவிர பரிசோதனை மேற்கொண்டனா்.

உலக நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்தவகையில் சேலம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் அதிநவீன தொ்மல் ஸ்கேனா் கருவிகள் மூலம் மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை முதல் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

குறிப்பாக, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்கள் தனியாக சேகரிக்கப்பட்டு, அவா்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்த திடீா் சோதனைகளால் விமான நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், இது முற்றிலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.