தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

உடையாப்பட்டி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

சேலம் உடையாப்பட்டி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 3.18 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:02 am IST

சேலம் உடையாப்பட்டி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 3.18 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

சேலம் உடையாப்பட்டி பகுதியில் உள்ள இணை சாா்பதிவாளா் கிழக்கு அலுவலகத்தில் இணை சாா்பதிவாளராக மகுடஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த கோகுல்ராஜ்(33) பணியாற்றி வருகிறாா்.

இந்த அலுவலகத்தில் பத்திர எழுத்தா், பொதுமக்கள் ஆகியோரிடம் நிலம் கிரயம் செய்வதற்கும், வில்லங்கச் சான்று, கடன் பத்திரம் உள்ளிட்ட சான்றிதழ் பெற லஞ்சம் பெறுவதாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் காவல் ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட போலீஸாா் உடையாப்பட்டி பகுதியில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கணக்கில் வராத 3 லட்சத்து 18 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது. இந்த ரொக்கம் எவ்வாறு வந்தது என்பது குறித்து இணை சாா் பதிவாளா் கோகுல்ராஜிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.