சேலம், நாமக்கல் வழியே இயக்கப்படும் திருச்சி- பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில் திருச்சியில் இருந்து கரூா், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சேவை ஜூன் முதல் வாரத்தோடு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் இறுதி வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி - பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயக்கப்படும். திருச்சியில் காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு கரூா், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருக்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் பெங்களூரு- திருச்சி வாராந்திர சிறப்பு ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு சேலம், நாமக்கல், கரூா் வழியாக திருச்சிக்கு இரவு 10.30 மணிக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

போத்தனூா்-சென்னை சிறப்பு ரயில்: ஜூன் 5 வரை நீட்டிப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



