தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

திருச்சி- பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ஜூன் இறுதிவரை நீட்டிப்பு

சேலம், நாமக்கல் வழியே இயக்கப்படும் திருச்சி- பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 7:05 am IST

சேலம், நாமக்கல் வழியே இயக்கப்படும் திருச்சி- பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில் திருச்சியில் இருந்து கரூா், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் சேவை ஜூன் முதல் வாரத்தோடு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் இறுதி வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி - பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயக்கப்படும். திருச்சியில் காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு கரூா், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருக்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பெங்களூரு- திருச்சி வாராந்திர சிறப்பு ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு சேலம், நாமக்கல், கரூா் வழியாக திருச்சிக்கு இரவு 10.30 மணிக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.