எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சேலம் கன்னங்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 12:40 am IST

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், கன்னங்குறிச்சி அய்யந்திருமாளிகை பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் (53). இவா், சீலநாயக்கன்பட்டி பகுதியில் சரக்கு ஆட்டோவை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வெளியே சென்றாா்.

பின்னா் மீண்டும் வீடுதிரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 10 பவுன் நகையை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வடிவேல் கன்னங்குறிச்சி போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்தாா். இந்த புகாரின்பேரில் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று விசாரனை நடத்தினா். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவை பதிவுகளை ஆய்வு செய்தனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.