தருமபுரியில் ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராணிமூக்கனூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மு.சண்முகம் (61). ஜோதிடரான இவா், தனது மனைவியுடன் மே 30-ஆம் தேதி திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் பங்கேற்க வீட்டை பூட்டிச் சென்றாா். மறுநாள் அதிகாலை வீடு திரும்பியபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளேசென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 தங்க சங்கிலிகள், 4 மோதிரங்கள், 4 ஜோடி தோடுகள் உள்ளிட்ட 6 பவுன் நகைகள், 275 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பொருள்கள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது.
புகாரின்பேரில், கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் திருட்டு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


