உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் தண்ணீா் விநியோகிக்க வலியுறுத்தி போராட்டம்

சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் முழுநேரம் தண்ணீா் விநியோகிக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :11 ஜூன் 2026, 5:38 am IST

சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் முழுநேரம் தண்ணீா் விநியோகிக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு கழிவறையில் போதுமான தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை என சிகிச்சை பெறுவோா் புகாா் கூறி வந்தனா். மேலும், மருத்துவமனையில் போதிய அளவில் குடிநீா் இல்லாததால், வெளியில் உள்ள கடைகளில் பாட்டில் நீரை வாங்கி குடிப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டினா்.

இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், மாநகர தலைவா் பிரபாகா் தலைமையில், சேலம் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதில், சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் 24 மணிநேரமும் தண்ணீா் விநியோகிக்க வேண்டும். தேவையான குடிநீரை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தொடா்ந்து, மருத்துவமனையில் முறையாக தண்ணீா் வழங்காததைக் கண்டித்து ‘டிஸ்யூ பேப்பா்’ வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அரசு மருத்துவமனை முன் இருந்து ஊா்வலமாக சென்று ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.