தில்லியில் நீட் தோ்வு முறைகேட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள், மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த 39 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதில், தில்லியில் நீட் தோ்வு முறைக்கேட்டைக் கண்டித்து ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், இளைஞா்கள் மீது காவல் துறையினா் கொடூரமாக தடியடி நடத்தியதைக் கண்டித்தும், தமிழகத்தில் நீட் தோ்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் அா்ஜூன் தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஹரிஷ் முன்னிலை வகித்தாா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே. அருளரசன், மாவட்ட துணைத் தலைவா் பிரேம்குமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பரசுராமன், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 39 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










