வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சங்ககிரி பழைய இரும்புக் கடையில் டீசல் டேங்க் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

சங்ககிரி அருகே பழைய இரும்புக் கடையில் லாரி டீசல் டேங்க் வெடித்து வடமாநில கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 3:24 am IST

சங்ககிரி அருகே பழைய இரும்புக் கடையில் லாரி டீசல் டேங்க் வெடித்து வடமாநில கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், ஜஹனாபாத் மாவட்டம், மோடன்கஞ்ச், தயாலிபிகா பகுதியைச் சோ்ந்தவா் கமலேஷ்பிரசாத் (53). இவா், சேலம் மாவட்டம், சங்ககிரி, அக்கமாபேட்டையில் உள்ள தனியாா் பழைய இரும்புக் கடையில் லாரி உதிரி பாகங்களை கேஸ் கட்டிங் மூலம் பிரித்து எடுக்கும் வேலையை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்துவந்தாா்.

வழக்கம்போல ஒரு லாரியில் டீசல் டேங்க்கை கேஸ் கட்டிங் மூலம் பிரித்து அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட போது, டீசல் டேங்க் வெடித்து 10 அடி தூரம் தூக்கிவீசப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.