சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சேலம், பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே லைன் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (25). இவா்மீது கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை சேலம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து, திங்கள்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜுக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.









