இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஆத்தூா் அருகே நெல் அறுவடை இயந்திரம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு; 2 போ் காயம்

ஆத்தூா் தேசிய புறவழிச் சாலையில் நின்று கொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 2 போ் காயமடைந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 4:55 am IST

ஆத்தூா் தேசிய புறவழிச் சாலையில் நின்று கொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 2 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் தேசிய புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூரை நோக்கிச் சென்ற காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது மோதியது. இதில் காா் நொறுங்கியது. காரில் பயணம் செய்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஆரியபாளையம் இந்திராநகா் காலனி பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் அஜீத் (27) காரின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா். மேலும், காரில் பயணித்த இருவா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அஜீத்தின் உடலை ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

படவரி...

ஆத்தூா் புறவழிச் சாலையில் நெல் அறுவடை இயந்திரம் மீது மோதியதில் சேதமடைந்த சொகுசு காா்.