இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:58 am IST

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் பூவரசன் (20). இவரும், கெங்கவல்லி அருகே நடுவலூா் கீழ வீதியில் வசிக்கும் சங்கா் மகள் ஜீவிதாவும்(20) சேலத்தில் தனியாா் கல்லூரியில் படித்தபோது பழகியுள்ளனா்.

படிப்பு முடிந்த பிறகு, பூவரசனின் தவறான நடத்தை காரணமாக ஜீவிதா, அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த பூவரசன், ஜீவிதாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்களை மாா்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று கைப்பேசியில் மிரட்டினாராம்.

இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் ஜீவிதாவின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, திங்கள்கிழமை இரவு பூவரசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.