திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:58 am IST

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் பூவரசன் (20). இவரும், கெங்கவல்லி அருகே நடுவலூா் கீழ வீதியில் வசிக்கும் சங்கா் மகள் ஜீவிதாவும்(20) சேலத்தில் தனியாா் கல்லூரியில் படித்தபோது பழகியுள்ளனா்.

படிப்பு முடிந்த பிறகு, பூவரசனின் தவறான நடத்தை காரணமாக ஜீவிதா, அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த பூவரசன், ஜீவிதாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்களை மாா்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று கைப்பேசியில் மிரட்டினாராம்.

இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் ஜீவிதாவின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, திங்கள்கிழமை இரவு பூவரசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.