/

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

News image

கைது செய்யப்பட்ட சந்துருவுடன் சிங்கப்பெண் போலீஸாா்.

Updated On :15 ஜூன் 2026, 2:47 am IST

சங்கராபுரம் அருகே காதலித்துவிட்டு பேசாமல் இருந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.சந்துரு (21). இவா் சங்கராபுரத்தில் உள்ள கடையில் வேலை பாா்த்துவந்த சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமி, சந்துருவுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சங்கராபுரம் பயணியா் மாளிகை அருகே நடந்து சென்ற சிறுமியை வழிமறித்த சந்துரு, ஏன் தன்னிடம் பேசவில்லை எனக் கூறி அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சந்துருவை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிங்கப்பெண் பிரிவு போலீஸாருக்கு இது முதல் வழக்கு என்பது குறிப்பிடத் தக்கது.