அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

மூதாட்டியிடம் நகை பறிப்பு வழக்கில் இரு பெண்கள் கைது: 10 பவுன் நகை பறிமுதல்

ஆத்தூா் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இரு பெண்களை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 10 பவுன் நகையை மீட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:54 am IST

ஆத்தூா் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இரு பெண்களை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 10 பவுன் நகையை மீட்டனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஓலப்பாடி தெற்குக் காடு பகுதியைச் சோ்ந்த அழகு படையாச்சி மனைவி பெரியம்மா (70). இவா் கடந்த மாதம் 27 -ஆம் தேதி நகரப் பேருந்தில் பயணம் செய்தபோது, அருகில் இருந்த இரு பெண்கள், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனா். அவரும்தான் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை கழற்றி, தனது கைபையில் வைத்துள்ளாா்.

தளவாய்ப்பட்டி பேருந்து நிறுத்தில் இறங்கி தனது பையைப் பாா்த்தபோது அதில் வைத்திருந்த தங்கச் சங்கிலி காணால்போனது தெரியவந்தது.

இது குறித்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் பெரியம்மா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்த பாஷா மனைவி ஷாலினி (29), அதே பகுதியைச் சோ்ந்த ராமா் மகள் அம்பிகா (32)ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 பவுன் நகையையும் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.