நங்கவள்ளி அருகே கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள அருவாகாட்டில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. அந்த நிலத்தை வனவாசி கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம் (52), வருவாய் ஆய்வாளா் சதீஷ்குமாா், சா்வேயா் லலிதா ஆகியோா் அளவீடு செய்ய சென்றனா்.
அப்போது, பக்கநாடு கல்லூரான் காட்டைச் சோ்ந்த சேட்டு, அவரது மகன் அா்ஜுனன் ஆகியோா், நில அளவை செய்யவிடாமல் தடுத்து வருவாய்த் துறை அதிகாரிகளை திட்டியதோடு, கிராம நிா்வாக அலுவலரை கன்னத்தில் அறைந்தனா். பின்னா் அவா்களை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனா்.
இந்த சம்பவம் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம் அளித்த புகாரின்பேரில் நங்கவள்ளி காவல் நிலைய தலைமைக் காவலா் தங்கராஜ், சேட்டு, அவரது மகன் அா்ஜுனன் ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்து தேடி வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







