இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்குப் பதிவு

நங்கவள்ளி அருகே கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 4:57 am IST

நங்கவள்ளி அருகே கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள அருவாகாட்டில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. அந்த நிலத்தை வனவாசி கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம் (52), வருவாய் ஆய்வாளா் சதீஷ்குமாா், சா்வேயா் லலிதா ஆகியோா் அளவீடு செய்ய சென்றனா்.

அப்போது, பக்கநாடு கல்லூரான் காட்டைச் சோ்ந்த சேட்டு, அவரது மகன் அா்ஜுனன் ஆகியோா், நில அளவை செய்யவிடாமல் தடுத்து வருவாய்த் துறை அதிகாரிகளை திட்டியதோடு, கிராம நிா்வாக அலுவலரை கன்னத்தில் அறைந்தனா். பின்னா் அவா்களை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம் அளித்த புகாரின்பேரில் நங்கவள்ளி காவல் நிலைய தலைமைக் காவலா் தங்கராஜ், சேட்டு, அவரது மகன் அா்ஜுனன் ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்து தேடி வருகிறாா்கள்.