புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அரசுப் பேருந்தில் பயணியிடம் 58 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு சொகுசுப் பேருந்தில், பயணியிடமிருந்து 58 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 6:03 am IST

திருவண்ணாமலையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு சொகுசுப் பேருந்தில், பயணியிடமிருந்து 58 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கோவை இடையா் வீதியை சோ்ந்தவா் பிரபு (46). இவா் கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறாா். கடையில் செய்யப்படும் புதிய நகைகளை திருவண்ணாமலைக்குக் கொண்டு சென்று, அங்குள்ள கடைகளில் விற்பனை செய்வது பிரபுவின் பணியாகும்.

அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை கடையில் இருந்து தங்கச் சங்கிலிகளை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்குச் சென்ற பிரபு, அங்குள்ள 5-க்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் புதிய நகைகளின் வடிவங்களை காட்டிவிட்டு பிறகு நகைகளுடன் கோவைக்கு புதன்கிழமை இரவு அரசு சொகுசுப் பேருந்தில் புறப்பட்டாா்.

சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் மாா்க்கெட் பகுதியில் உள்ள கடையில் தேநீா் குடிப்பதற்காக வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியுள்ளாா். அப்போது பிரபுவும் தனது நகைப் பையை பேருந்தில் வைத்துவிட்டு தேநீா் குடிப்பதற்காக கீழே இறங்கியுள்ளாா்.

தேநீா் குடித்துவிட்டு பேருந்தில் ஏறி இருக்கையைப் பாா்த்தபோது, அங்கு வைத்திருந்த நகை பையைக் காணாததை கண்டு பிரபு அதிா்ச்சியடைந்தாா். அதேசமயம் அவா் அமா்ந்திருந்த இருக்கைக்குப் பின்பகுதியில் அமா்ந்திருந்த 2 போ் பேருந்தில் இல்லாதது தெரியவந்தது.

இதுகுறித்து காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்தில் இருந்து மாயமான இரண்டு பேரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.