ஆட்டையாம்பட்டியை அடுத்த கல்பாரப்பட்டி கொம்பாடிப்பட்டி ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கொம்பாடிப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முழுவதும் முறையாக வடிய வழியின்றி, கொம்பாடிப்பட்டி ரயில்வே தரைவழிப் பாலத்தின் அடியில் தேங்கி நிற்கிறது.
இதனால், அவ்வழியாக அன்றாடம் செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனா். கழிவுநீா் தேங்கியுள்ள தரைப்பாலப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனா்.
இதனால் நெடுஞ்சாலைத் துறையினரும், ஊராட்சி நிா்வாகத்தினரும் உடனடியாக ஆய்வு செய்து, கழிவுநீரை அப்புறப்படுத்தவும், தேங்குவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆவுடையானூா் அருகே பாலத்தில் பெரிய பள்ளம்: விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

சுப்பராயபுரம்-முதலூா் தருமாபுரி சாலை சேதம்: சீரமைக்க கோரிக்கை

வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



