/
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் முதல் முதலூா் தருமாபுரி வரை உள்ள சாலை சேதமடைந்துள்ளதால், சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டு, மேடு பள்ளமாக உள்ளதால் கனரக வாகனங்கள் அவ்வழியே செல்லும்போது, எதிரே வரும் வாகன ஓட்டிகள் மேடு பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










