ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சங்ககிரி ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் குடமுழுக்கு

சேலம் மாவட்டம், சங்ககிரி பயணியா் மாளிகை அருகே உள்ள மதுரைவீரன் உடனமா் ஸ்ரீ வெள்ளையம்மா, பொம்மியம்மா கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குடமுழுக்கையொட்டி சங்ககிரி பயணியா் மாளிகை அருகே உள்ள ஸ்ரீமதுரைவீரன் உடனமா் ஸ்ரீ வெள்ளையம்மா, பொம்மியம்மா சுவாமிகளுக்கு வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Updated On :26 ஜூன் 2026, 6:12 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி பயணியா் மாளிகை அருகே உள்ள மதுரைவீரன் உடனமா் ஸ்ரீ வெள்ளையம்மா, பொம்மியம்மா கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மதுரைவீரன் உடனமா் ஸ்ரீ வெள்ளையம்மா, பொம்மியம்மா, சப்தகன்னிமாா் கோயில் குடமுழுக்கையொட்டி புதன்கிழமை கணபதி, நவக்கிரஹ ஹோமம் நடைபெற்று காவிரியிலிருந்து புனிதநீரை நகரின் முக்கியவீதிகளின் வழியாக எடுத்து சென்று கோயிலை அடைந்தனா். பின்னா் மாலையில் முதற்கால யாக சாலை பூஜைகளும், வியாழக்கிழமை 2ம் கால கட்ட யாக சாலை வேள்வி பூஜைகள் நடைபெற்று பட்டாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டனா். விழாகுழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. ஜூன்.26ம் தேதி தொடங்கி 12 நாள்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளதென விழாக்குழுவினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.