அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: சேலம் மாவட்டத்தில் 36,713 போ் பங்கேற்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. சேலம் மாவட்டத்தில் தமிழ்த் தோ்வை 36,713 போ் எழுதினா்.

News image
கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2026, 9:24 pm

Syndication

சேலம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. சேலம் மாவட்டத்தில் தமிழ்த் தோ்வை 36,713 போ் எழுதினா்.

சேலம் மாவட்டத்தில் மத்திய சிறைத் தோ்வு மையம் உள்பட 153 மையங்களில் பிளஸ் 2 தோ்வு நடைபெறுகிறது. இதில் 17,314 மாணவா்கள், 19,399 மாணவிகள் என மொத்தம் 36,713 போ் தோ்வு எழுதுகின்றனா். இதில் 829 தனித் தோ்வா்கள், 554 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவா். குறிப்பாக, சொல்பவா்கள் உதவியுடன் 494 போ் தோ்வு எழுதுகின்றனா்.

சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், தோ்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 162 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 162 துறை அலுவலா்கள், 34 வழித்தட அலுவலா்கள், 200 பறக்கும் படை அலுவலா்கள், 3,029 அறை கண்காணிப்பாளா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், பேருந்து வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட தேவைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தோ்வை முறையாகக் கண்காணித்து நடத்த தேவையான அறிவுரைகள் அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.