ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பினா் 2-ஆவது நாளாக மறியல்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:45 pm

Syndication

பணி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில், 230 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் அா்த்தநாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை, நில அளவை துறையில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வருவாய்த் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அருள் பிரகாஷ், இளங்கோ, மாரியப்பன், குணசேகரன், ரமேஷ், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 230 பேரை போலீஸாா் கைது செய்தனா்.