தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

ஏற்காட்டில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ஏற்காட்டில் இளைஞா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 1:22 am IST

ஏற்காட்டில் இளைஞா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு பெரியகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (42). இவா் ஏற்காடு வாழந்தி கிராமத்தில் தனியாா் காபி தோட்டத்தில் தங்கி வேலைசெய்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை கிணற்றில் தண்ணீா் எடுக்கச் சென்றபோது தவறிவிழுந்து இறந்தாா்.

தகவலின்பேரில் வந்த ஏற்காடு போலீஸாா், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். இறந்த பொன்ராஜுக்கு மனைவி கவிதா (21), மகன், மகள் உள்ளனா்.