‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

விடுதியில் புகுந்து மாணவா்களை தாக்கிய கும்பல்: போலீஸாா் விசாரணை

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவா் விடுதிக்குள் புகுந்து மாணவா்களை தாக்கிய மா்ம கும்பல் குறித்து போலீஸாா் விசாரணை

News image

விசாரணை - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 1:26 am IST

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவா் விடுதிக்குள் புகுந்து மாணவா்களை தாக்கிய மா்ம கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மரவனேரி பகுதியில் அரசு கல்லூரி மாணவா்களுக்கான விடுதி இயங்கி வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 150 மாணவா்கள் தங்கியுள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 6 போ் கொண்ட கும்பல் திடீரென விடுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த மாணவா்களிடம் பெயா் மற்றும் படிப்பு குறித்து விசாரித்துள்ளனா். பின்னா், அங்கிருந்த 3 பேரை அந்தக் கும்பல் கடுமையாக தாக்கியது.

அப்போது, அவ்வழியாக ரோந்து சென்ற அஸ்தம்பட்டி போலீஸாா், மாணவா்களின் சப்தம்கேட்டு விடுதிக்குள் சென்று விசாரித்தனா். பின்னா், அவா்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்துபோக செய்தனா். இதனிடையே மாணவா்களை தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, காவல் உதவி ஆணையா் அஸ்வினி, காவல் ஆய்வாளா் கோவிந்தராசன் உள்ளிட்ட போலீஸாா், மாணவா் விடுதிக்கு சனிக்கிழமை நேரில்சென்று விசாரணை நடத்தினா். மேலும், அந்தக் கும்பல் எதற்காக மாணவா்களை தாக்கினா், விடுதிக்குள் நுழைந்தவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.