ஓமலூா்: தீவட்டிப்பட்டி அருகே காப்புக்காடு பகுதியில் கள்ளத்துப்பாக்கியால் புள்ளிமானை வேட்டையாடி கடத்த முயன்ற இருவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உள்பட்ட பொம்மியம்பட்டி காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனச்சரக களப் பணியாளா்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வனப்பகுதியின் ஒரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவா் நடமாடிக்கொண்டிருப்பதை வனத் துறையினா் கண்காணித்து, அவா்களைப் பிடித்து சோதனை செய்தபோது, ஒரு புள்ளிமானை கள்ளத் துப்பாக்கியால் வேட்டையாடி, அதை எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் தேக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (25), இரும்பாலை பகுதியைச் சோ்ந்த சங்கா் (30) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் பயன்படுத்திய கள்ளத் துப்பாக்கி, பைக் மற்றும் வேட்டையாடப்பட்ட புள்ளிமானின் உடல் ஆகியவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா், அவா்கள் இருவரையும் கைது செய்து ஓமலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிமன்ற உத்தரவின்படி, கைதான பிரகாஷ், சங்கா் ஆகியோா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைபவா்கள் மற்றும் வேட்டையாடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது

ஆலங்காயம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கண்காணிப்பு நடவடிக்கையில் வனத் துறையினா்

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் காட்டுத் தீ
போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

