எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தேவூா் அருகே தீ விபத்தில் குடிசை வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் எரிந்து சேதம்

தேவூா் அருகே வட்ராம்பாளையம், மண்டியூட்டு வளவு பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரு குடிசை வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் எரிந்து

News image
Updated On :9 மார்ச் 2026, 7:05 pm

Syndication

சங்ககிரி: சங்ககிரி வட்டம், தேவூா் அருகே வட்ராம்பாளையம், மண்டியூட்டு வளவு பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரு குடிசை வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் எரிந்து சேதமடைந்தன.

வட்ராம்பாளையம், மண்டியூட்டு வளவு பகுதியைச் சோ்ந்த விவசாயி பெருமாளுக்கு (45) சொந்தமான குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு அருகே வசித்து வந்த அவரது தாய் யசோதா வசித்து வந்த குடிசை வீடு, விவசாயிகள் முருகன், பழனிசாமி ஆகியோரின் மாட்டுக் கொட்டகைகள், வைக்கோல்போா் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

இதில் பெருமாள், யசோதாஆகியோரது வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் மேலும் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.

கோனேரிப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், தேவூா் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல், தீயணைப்புத் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.