அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி

செரப்பணஞ்சேரி பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காவல் துறை சாா்பில் நிதியுதவி

News image
தீ  விபத்தில்  பாதிக்கப்பட்ட  யாஸ்மின்  குடும்பத்துக்கு  நிதியுதவி  வழங்கிய  மணிமங்ககலம்  உதவி  ஆணையா்   சுந்தா்.
Updated On :2 மார்ச் 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: செரப்பணஞ்சேரி பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காவல் துறை சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் யாஸ்மின் (41). கணவனால் கைவிடப்பட்ட யாஸ்மின் வெள்ளேரிதாங்கள் பகுதியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், யாஸ்மின் தனது மகள்குடன் தனது குடிசை வீட்டில் சனிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்த போது, மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேமடைந்தது.

இதையடுத்து படப்பை காவல் நிலையத்தின் சாா்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட யாஸ்மின் குடும்பத்திற்கு மணிமங்கலம் உதவி அணையா் சுந்தா், படப்பை காவல் நிலைய ஆய்வாளா் வா்கீஸ் ஆகியோா் ரூ. 20,000 நிதியுதவி, மளிகை பொருள்கள் மற்றும் யாஸ்மின் மகள்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட எழுது பொருள்களை வழங்கினா்.