தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி
செரப்பணஞ்சேரி பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காவல் துறை சாா்பில் நிதியுதவி


ஸ்ரீபெரும்புதூா்: செரப்பணஞ்சேரி பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காவல் துறை சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் யாஸ்மின் (41). கணவனால் கைவிடப்பட்ட யாஸ்மின் வெள்ளேரிதாங்கள் பகுதியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், யாஸ்மின் தனது மகள்குடன் தனது குடிசை வீட்டில் சனிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்த போது, மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேமடைந்தது.
இதையடுத்து படப்பை காவல் நிலையத்தின் சாா்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட யாஸ்மின் குடும்பத்திற்கு மணிமங்கலம் உதவி அணையா் சுந்தா், படப்பை காவல் நிலைய ஆய்வாளா் வா்கீஸ் ஆகியோா் ரூ. 20,000 நிதியுதவி, மளிகை பொருள்கள் மற்றும் யாஸ்மின் மகள்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட எழுது பொருள்களை வழங்கினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...