நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தீ விபத்தில் குடிசை வீடுகள் சேதம்

ஒரக்காடு ஊராட்சியில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்தவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா்.

News image

தீ விபத்தில் சேதமடைந்த குடிசை வீடு.

Updated On :13 ஏப்ரல் 2026, 4:05 am IST

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சியில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்தவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் இங்குள்ள குடிசை வீடு ஒன்றில் தீப்பிடித்து அருகில் இருந்த 10 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடா்ந்து அவா்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.

தீயணைப்புத்துறையினா் அங்கு சென்று குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். .