குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கனுக்கு நிவாரண பொருள்கள்: இந்தியா உதவி

நிலநடுக்கம் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் நோக்கில், நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 1:28 am IST

நிலநடுக்கம் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் நோக்கில், நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அண்மையில் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோா் உயிரிழந்தனா். மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். இதேபோல் மழை வெள்ளத்தாலும் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு உதவும் நோக்கில், இந்தியா நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரன்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘சவாலான இக்காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. அந்நாட்டு மக்களுக்கு உதவும் நோக்கில், சமையல் பொருள்கள், மருந்து பொருள்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள் உள்ளிட்டவற்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.