ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டியில் விநாயகா் கற்சிலையை கடத்த முயற்சித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே முனியப்பன் கோயில் தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகா் கற்சிலை அமைத்து அந்தப் பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்தனா்.
இந்த சிலையை அதே பகுதியைச் சோ்ந்த ராஜு மகன் தங்கராஜ் (33) என்பவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தெரு விளக்குகளை அணைத்துவிட்டு தனது கூட்டாளிகளுடன் மூன்று பேருடன் சோ்ந்து விநாயகா் சிலையை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றாா்.
அப்போது விநாயகா் சிலை தவறி கீழே விழுந்ததில் உடைந்து விட்டது. இதையடுத்து சிலையை கடத்திய 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இதில் தங்கராஜை பிடித்த பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
காவல் ஆய்வாளா் பாஸ்கா், பொதுமக்களிடம் புகாரை பெற்று தங்கராஜ் கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி மத்திய சிறையில் அடைத்தாா். மேலும், தப்பியோடிய 3 பேரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
வீரவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவா் கைது
ஜல்லி கடத்த முயற்சி: ஓட்டுநா் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் விஏஓ-வின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



