சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

லத்துவாடியில் 7 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

வீரகனூா் அருகே லத்துவாடி கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் நகை, பணம், பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
லத்துவாடியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்த வீட்டில் விசாரணை நடத்திய டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸாா்.
Updated On :11 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

வீரகனூா் அருகே லத்துவாடி கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் நகை, பணம், பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

லத்துவாடி கிராமத்தில் சுமாா் 3,000 க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்துவருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இப்பகுதியில் உள்ள சதீஷ்குமாா், பழனியம்மாள், சேகா், சாந்தி, சூா்யா, சரோஜா, பால்ராஜ் ஆகியோரது வீடுகளில் மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகை, இரண்டு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் , ரூ.50,000 ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆத்தூா் டிஎஸ்பி சத்யராஜ், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா்.