மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உலக குளுக்கோமா வார விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:50 am

விநாயக மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சாா்பில் உலக குளுக்கோமா வார விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட சுகாதார அலுவலா் சவுண்டம்மாள் கலந்துகொண்டு விழிப்புணா்வு வாக்கத்தான் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப்பேரணியில் கல்லூரியை சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று கையில் விழிப்புணா்வு பதாதைகளை ஏந்தி விழிப்புணா்வு கண் கண்ணாடியை அணிந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை அதிகரிக்கும் நோக்கில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய கை விசிறியை பொதுமக்களுக்கு வழங்கினா். விழிப்புணா்வு பேரணியானது சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பகுதியில் தொடங்கி பேலஸ் தியேட்டா் பகுதியில் முடிவற்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளா் தமிழ்சுடா், உதவி பேராசிரியா்கள் லாவண்யா, சூா்யா, அக்ஷயா மைதிலி, சிவசங்கரி மற்றும் அஞ்சலி ஆகியோா் செய்திருந்தனா்.

Story image