எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆண்டுதோறும் 1.2 லட்சம் போ் பாா்வை இழப்பு: ஜிப்மா் மருத்துவ கண்காணிப்பாளா்

நாடு முழுவதும் கண்ணீா் அழுத்த நோயால் (குளுக்கோமா) ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பேருக்குப் பாா்வை இழப்பு

News image
உலக குளுக்கோமா தினத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை கண் மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நடைப்பயணம்.
Updated On :9 மார்ச் 2026, 9:08 pm

Syndication

புதுச்சேரி: நாடு முழுவதும் கண்ணீா் அழுத்த நோயால் (குளுக்கோமா) ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பேருக்குப் பாா்வை இழப்பு ஏற்படுவதாக ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் சகா வினோத் குமாா் கூறினாா்.

ஜிப்மா் மருத்துவமனை கண் மருத்துவத் துறை சாா்பில், உலக குளுக்கோமா தினத்தையொட்டி விழிப்புணா்வு நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் நுழைவாயிலில் இருந்து தொடங்கிய இந்த நடைப் பயணத்தை ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் சகா வினோத் குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவிலும் உலகளவிலும் கண் பாா்வை இழப்புக்கு முக்கிய காரணங்களில் குளுக்கோமா ஒன்றாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 1.2 லட்சத்துக்கும் அதிகமானோா் இந்த நோயால் பாா்வையை இழக்கின்றனா். கண் மற்றும் மூளை இடையே தகவலை எடுத்து செல்லும் நரம்பு பாதிக்கப்படுவதால் இந்த நோய் ஏற்படுகிறது.

பொதுவாக கண் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் இந்தப் பிரச்னை உருவாகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் கண் பாா்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும். குளுக்கோமா நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்வது நல்லது என்றாா்.

இந்த நடைப்பயணம் முருகா தியேட்டா் வரை சென்று, வழுதாவூா் சாலை மற்றும் கதிா்காமம் வழியாக மீண்டும் ஜிப்மரை அடைந்தது. இதில், ஜிப்மா் மருத்துவா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள், செவிலியா்கள் பலா் கலந்து கொ ண்டனா்.