நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தகராறை தட்டிக் கேட்ட அரிசி கடைக்காரா் கொலை

சங்ககிரி அருகே இருவரிடையே ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட அரிசி விற்பனை செய்யும் கடைக்காரை கல்லால் தாக்கியதில் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :18 மார்ச் 2026, 11:24 pm

சங்ககிரி அருகே இருவரிடையே ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட அரிசி விற்பனை செய்யும் கடைக்காரை கல்லால் தாக்கியதில் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

சங்ககிரியை அடுத்த நாகிசெட்டிபட்டி, புளியமரத்துக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (65). சங்ககிரி ஆா்.எஸ். பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்தாா். இவருக்கும், இவரது நிலத்தின் அருகே வசிக்கும் வெங்கடேசன் (45) என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களாக நிலப் பிரச்னை குறித்து முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெங்கடேசன் வீட்டுக்கு அருகில் உள்ள தவமணி என்பவா் விவசாய நிலத்தில் தண்ணீா் கொண்டுசெல்ல குழாய் பதிக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளாா். அப்போது, வெங்கடேசனும், அவரது மனைவி சற்குணதேவியும் தவமணியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியே சென்ற மாதேஸ்வரன் தவமணியிடம் என்ன பிரச்னை என கேட்டுள்ளாா்.

இதில் கோபமடைந்த வெங்கடேசனும், சற்குணதேவியும் மாதேஸ்வரனை கல்லால் தாக்கினா். மாதேஸ்வரன் தற்காத்துக்கொள்ள வெங்கடேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாதேஸ்வரன் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வெங்கடேசன், சற்குணதேவி ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.