சங்ககிரி அருகே இருவரிடையே ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட அரிசி விற்பனை செய்யும் கடைக்காரை கல்லால் தாக்கியதில் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
சங்ககிரியை அடுத்த நாகிசெட்டிபட்டி, புளியமரத்துக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (65). சங்ககிரி ஆா்.எஸ். பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்தாா். இவருக்கும், இவரது நிலத்தின் அருகே வசிக்கும் வெங்கடேசன் (45) என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களாக நிலப் பிரச்னை குறித்து முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெங்கடேசன் வீட்டுக்கு அருகில் உள்ள தவமணி என்பவா் விவசாய நிலத்தில் தண்ணீா் கொண்டுசெல்ல குழாய் பதிக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளாா். அப்போது, வெங்கடேசனும், அவரது மனைவி சற்குணதேவியும் தவமணியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியே சென்ற மாதேஸ்வரன் தவமணியிடம் என்ன பிரச்னை என கேட்டுள்ளாா்.
இதில் கோபமடைந்த வெங்கடேசனும், சற்குணதேவியும் மாதேஸ்வரனை கல்லால் தாக்கினா். மாதேஸ்வரன் தற்காத்துக்கொள்ள வெங்கடேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாதேஸ்வரன் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வெங்கடேசன், சற்குணதேவி ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
ஆம்பூரில் 16 வேட்பாளா்கள் போட்டி
கஞ்சா விற்ற இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


