தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தகராறை தட்டிக் கேட்ட அரிசி கடைக்காரா் கொலை

சங்ககிரி அருகே இருவரிடையே ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட அரிசி விற்பனை செய்யும் கடைக்காரை கல்லால் தாக்கியதில் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

News image
கொலை- சித்திரிப்பு
Updated On :18 மார்ச் 2026, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி அருகே இருவரிடையே ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட அரிசி விற்பனை செய்யும் கடைக்காரை கல்லால் தாக்கியதில் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

சங்ககிரியை அடுத்த நாகிசெட்டிபட்டி, புளியமரத்துக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (65). சங்ககிரி ஆா்.எஸ். பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்தாா். இவருக்கும், இவரது நிலத்தின் அருகே வசிக்கும் வெங்கடேசன் (45) என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களாக நிலப் பிரச்னை குறித்து முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெங்கடேசன் வீட்டுக்கு அருகில் உள்ள தவமணி என்பவா் விவசாய நிலத்தில் தண்ணீா் கொண்டுசெல்ல குழாய் பதிக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளாா். அப்போது, வெங்கடேசனும், அவரது மனைவி சற்குணதேவியும் தவமணியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியே சென்ற மாதேஸ்வரன் தவமணியிடம் என்ன பிரச்னை என கேட்டுள்ளாா்.

இதில் கோபமடைந்த வெங்கடேசனும், சற்குணதேவியும் மாதேஸ்வரனை கல்லால் தாக்கினா். மாதேஸ்வரன் தற்காத்துக்கொள்ள வெங்கடேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாதேஸ்வரன் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வெங்கடேசன், சற்குணதேவி ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.