கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவாலா வாளவயல் பகுதியைச் சோ்ந்தவா் மேரி (58). இவரது மகள் தேன்மொழி (எ) ஜோஸ்பின். இவா் சனிக்கிழமை இரவு கோழிப்பாலம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, வீட்டுக்கு வந்த மருமகன் அசோக் (38), மனைவி தேன்மொழி குறித்து மாமியாா் மேரியிடம் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மதுபோதையில் இருந்த மருமகன் அசோக், மாமியாரை கத்தியால் வெட்டியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே மேரி உயிரிழந்தாா். அப்போது, தடுக்க வந்த மேரியின் மகன்கள் சுதாகரன் (28), அஜித் (26) ஆகியோரையும் அசோக் தாக்கியுள்ளாா்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தகவலறிந்து வந்த தேவாலா போலீஸாா், மேரியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அசோக்கை (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது
நிலத்தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது

கஞ்சா விற்ற 4 இளைஞா்கள் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

