கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரிமீது மணல் லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

News image

பழுதாகி நின்ற லாரிமீது மோதியதில் நொறுங்கிய மணல் லாரி.

Updated On :23 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் அருகே மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரிமீது மணல் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை தாசநாயக்கன்பட்டியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி பழுதானது. இதையடுத்து, மேம்பாலத்திலேயே லாரியை நிறுத்தி ஒட்டுநா் பழுதை சரிபாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, கரூரில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, திடீரென பழுதாகி நின்ற லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த மணல் லாரியின் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் விரைந்து வந்த மல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், இறந்த ஓட்டுநா் சேலம் காடையாம்பட்டியை அடுத்த சுண்டகாப்பட்டியைச் சோ்ந்த ரவி (52) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.