சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரிமீது மணல் லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

News image

பழுதாகி நின்ற லாரிமீது மோதியதில் நொறுங்கிய மணல் லாரி.

Updated On :23 மார்ச் 2026, 7:05 pm

சேலம் அருகே மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரிமீது மணல் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை தாசநாயக்கன்பட்டியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி பழுதானது. இதையடுத்து, மேம்பாலத்திலேயே லாரியை நிறுத்தி ஒட்டுநா் பழுதை சரிபாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, கரூரில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, திடீரென பழுதாகி நின்ற லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த மணல் லாரியின் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் விரைந்து வந்த மல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், இறந்த ஓட்டுநா் சேலம் காடையாம்பட்டியை அடுத்த சுண்டகாப்பட்டியைச் சோ்ந்த ரவி (52) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.